<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் நாதம் &#187; தாயகம்/இலங்கை</title>
	<atom:link href="http://tamilnaatham.dk/?feed=rss2&#038;cat=8" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tamilnaatham.dk</link>
	<description>Tamilnaatham</description>
	<lastBuildDate>Wed, 19 Jun 2013 04:11:13 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>13 ஒழிப்புக்கான பிரேரணையை வழிமொழிந்தது ஐ.தே.கட்சி</title>
		<link>http://tamilnaatham.dk/?p=14021</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=14021#comments</comments>
		<pubDate>Wed, 19 Jun 2013 04:11:13 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=14021</guid>
		<description><![CDATA[இலங்கை அரசமைப்பை திருத்துவதற்கான பிரேரணையை (13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான) ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் வண. நாடாளுமன்ற உறுப்பினர்... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=14021">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலங்கை அரசமைப்பை திருத்துவதற்கான பிரேரணையை (13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான) ஜாதிக <span id="more-14021"></span>ஹெல உறுமயவின் தவிசாளர் வண. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று சபையில் சமர்ப்பித்தார்.</p>
<p> குறித்த பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வழிமொழிந்தார். </p>
<p>நாடாளுமன்றில் நேற்று ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்ததும் பிரேரணை கொண்டுவருவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால்  குறித்த பிரேரணை சபையில் முன்மொழியப்பட்டது. </p>
<p>இவ்வேளை, சபையில் ஆளுங்கட்சி அமைச்சர்களும்,  உறுப்பினர்களும் இருந்தாலும், அரசமைப்பைத் திருத்தக்கோரும் ஹெல உறுமயவின் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவே வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p> அத்துடன், குறித்த பிரேரணை மீதான விவாதம் பிறிதொரு நாளில் நடைபெறும். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு கோரும் பிரேரணையை அண்மையில் ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்தார் என்பது தெரிந்ததே.</p>
<p> அரசமைப்பின் 21ஆவது திருத்தமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=14021</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காணியை மீட்டுத் தாருங்கள்</title>
		<link>http://tamilnaatham.dk/?p=14018</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=14018#comments</comments>
		<pubDate>Wed, 19 Jun 2013 04:06:35 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=14018</guid>
		<description><![CDATA[இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள்... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=14018">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் <span id="more-14018"></span>என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை  மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.</p>
<p>காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவுக்குச் சொந்தமான 60 பரப்புக் கொண்ட இந்தக் கெற்பேலிக் காணியில் இராணுவத்தினர் தற்போது நிரந்தர இராணுவ முகாம் அமைத்து வருகின்றனர்.</p>
<p>குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலும், யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு முன்னாள் உத்தியோகத்தர் இ.சிவசுவாமியின் கையொப்பத்துடன் ஒட்டப்பட்டிருந்தது.  குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>இந்த நிலையிலேயே குறித்த காணியில் தாம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், போர் நடவடிக்கைகள் காரணமாகக் குறித்த காணியைவிட்டு வெளியேறியிருந்ததாகவும் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை தொடரப் போவதாகவும் மக்கள் பிரதேச செயலரிடம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>குறித்த காணி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானது என்பதனால் மாவட்டச் செயலகத்தில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் சென்று கலந்துரையாடுமாறு பிரதேச செயலாளர் கூறியுள்ளார். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=14018</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழர் பிரச்சினைக்கான தீர்வு 13 ஆவது திருத்தம் அல்ல; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை</title>
		<link>http://tamilnaatham.dk/?p=14015</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=14015#comments</comments>
		<pubDate>Wed, 19 Jun 2013 04:02:12 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=14015</guid>
		<description><![CDATA[தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. இதன்மூலம்... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=14015">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் <span id="more-14015"></span>என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. இதன்மூலம் 13 ஆவது திருத்தத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் நிரத்தரத்தீர்வு உள்ளது என்று அர்த்தம் ஆகாது. </p>
<p>இவற்றையும் தாண்டி பூகோள அரசியல் மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. </p>
<p>இது தொடர்பில் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: </p>
<p>வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் தோன்றியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசியல் நிலைமைகளைத் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.</p>
<p> குறிப்பாக தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் முன்னரைப் போன்று வரலாற்றுத் தவறுகளை இனியும் இழைக்கக் கூடாது என்பது எமது கட்சியின் நோக்கமாகும். இது குறித்து காலத்துக்கு காலம் தாம் வலியுறுத்தி வருகின்றோம். </p>
<p>தற்போது பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.</p>
<p> எமது கட்சியைப் பொறுத்த வரை 13 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எத்தகைய நன் மையும் கிடைக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.</p>
<p> 13 ஆவது அரசியல் திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் அதுவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகி விடும் என்று கருதிவிட முடியாது. நாம் பல தடவை 13 ஆவது திருத்தத்தில் எந்த பயனும் இல்லை என்று வலியுறுத்தியிருக்கிறோம். </p>
<p>ஆனால் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான சந்தர்ப்பமாக 13 ஆவது திருத்தத்தைக் காட்டுகின்றனர். இன்று அந்தச் சட்டம் கேள்விக் குறி ஆகியுள்ளது.</p>
<p> ஆனால் மாகாண சபைகளை ஆரம்ப புள்ளியாகக் கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும் கூறுமளவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர்.</p>
<p> எங்களைப் பொறுத்த வரையில் இந்த 13 ஆவது திருத்தம் தமிழர் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம். </p>
<p>இதற்கு பல காரணங்கள் உள்ளன. சிங்கள தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழ் மக்களுக் கென பெயரளவில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றது.</p>
<p> இதனால் தமிழ் மக்களும் இந்த 13 ஆவது திருத்தத்தில் ஏதோ இருக்கின்றது என நினைப்பது ஆபத்தானது. எதிர்த்தரப்புக்கள் கூறும் கருத்துக்களுக்கு எதிர்வினையாக எங்கள் இருப்புக்கான முடிவு ளை எடுக்க முடியாது. </p>
<p>இவ்விடயத்தில் தமிழ் புத்தி ஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் கடமையுள்ளது. 13 ஆவது திருத்தத்தின் ஆபத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, இன்றுள்ள பூகோள அரசியல் நிலைமைகளையும் அதில் தமிழ் மக்களுக்குள்ள வாய்ப்புக்களையும், தமிழ் மக்களது அரசியல் பலங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதனூடாக மக்களை அரசியல் மயப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை தவறாக முடிவுகளை எடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.</p>
<p> இதன் மூலம் இன்று பூகோள அரசியல் மாற்றத்தினூடாக எமக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பான சூழ்நிலையை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றுள்ளது. </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=14015</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய  ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்</title>
		<link>http://tamilnaatham.dk/?p=14003</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=14003#comments</comments>
		<pubDate>Tue, 18 Jun 2013 03:13:50 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=14003</guid>
		<description><![CDATA[இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=14003">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி,<span id="more-14003"></span> லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.<br />
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை &#8211; அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.</p>
<p>இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.</p>
<p>அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.</p>
<p>திடீரென சிங்கக் கொடியேந்திய இலங்கை அரசு ஆதரவுக் காடையர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.</p>
<p>பிரித்தானியக் காவல்துறையினர் இலங்கை அரச ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.</p>
<p>இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.<br />
<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/juEMCMgqfz8" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><a href="http://tamilnaatham.dk/?attachment_id=14005" rel="attachment wp-att-14005"><img src="http://tamilnaatham.dk/wp-content/uploads/2013/06/BM_fmrjCEAAQ-c6.jpg" alt="" title="BM_fmrjCEAAQ-c6" width="560" height="450" class="alignleft size-full wp-image-14005" /></a></p>
<p><a href="http://tamilnaatham.dk/?attachment_id=14004" rel="attachment wp-att-14004"><img src="http://tamilnaatham.dk/wp-content/uploads/2013/06/BM_F7uxCAAA8gJ-.jpg" alt="" title="BM_F7uxCAAA8gJ-" width="560" height="450" class="alignleft size-full wp-image-14004" /></a></p>
<p><a href="http://tamilnaatham.dk/?attachment_id=14008" rel="attachment wp-att-14008"><img src="http://tamilnaatham.dk/wp-content/uploads/2013/06/ovel-clash7.jpg" alt="" title="ovel-clash7" width="560" height="330" class="alignleft size-full wp-image-14008" /></a></p>
<p><a href="http://tamilnaatham.dk/?attachment_id=14007" rel="attachment wp-att-14007"><img src="http://tamilnaatham.dk/wp-content/uploads/2013/06/ovel-clash2.jpg" alt="" title="ovel-clash2" width="560" height="340" class="alignleft size-full wp-image-14007" /></a></p>
<p><a href="http://tamilnaatham.dk/?attachment_id=14006" rel="attachment wp-att-14006"><img src="http://tamilnaatham.dk/wp-content/uploads/2013/06/ovel-clash1.jpg" alt="" title="ovel-clash1" width="560" height="300" class="alignleft size-full wp-image-14006" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=14003</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் மதச் சச்சரவு போதகர் உட்பட 12 பேர் காயம்</title>
		<link>http://tamilnaatham.dk/?p=13996</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=13996#comments</comments>
		<pubDate>Mon, 17 Jun 2013 05:31:19 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=13996</guid>
		<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் நேற்றுக்காலை இந்து ஆலய நிர்வாகிகளுக்கும் மெதடிஸ்த மிஷன் திருச்சபையினருக்கும் இடையே திடீரென கைகலப்பு... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=13996">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் நேற்றுக்காலை இந்து ஆலய நிர்வாகிகளுக்கும் மெதடிஸ்த மிஷன் திருச்சபையினருக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதில் மதபோதகர் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.  </p>
<p> அந்தப் பகுதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்<span id="more-13996"></span> நடைபெற்றுக்கொண்டிருந்தது.  அதே சமயத்தில் அருகில் உள்ள மெதடிஸ்த திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.</p>
<p>   அப்போது திருச்சபையின் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவதால் தமது பூசைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக  பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதை அடுத்து வாய்தகராறு முற்றி மோதலாக வெடித்தது. </p>
<p>  இதையடுத்து அந்தத் திருச்சபை தேவாலயமும் அதன் அருகில் இருந்த வீடொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.  </p>
<p> இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=13996</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆஸியில் ஈழ அகதிகள் மீது மீண்டும் தாக்குதல்</title>
		<link>http://tamilnaatham.dk/?p=13993</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=13993#comments</comments>
		<pubDate>Mon, 17 Jun 2013 05:27:49 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=13993</guid>
		<description><![CDATA[ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள சன்சயின் பகுதியில் ஈழ அகதிகள் மீது கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டு... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=13993">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள சன்சயின் பகுதியில் ஈழ அகதிகள்  மீது<span id="more-13993"></span> கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டு அவர்களின் பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  </p>
<p> நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஈழ அகதிகள் இருவர் கடைக்கு சென்று விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்தபோது கறுப்பினத்தைச் சேர்ந்த _மார் பத்து பேர் இவர்களை வழி மறித்துத் தாக்கியுள்ளனர்.  </p>
<p>  இதில் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மற்றைய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.   தாக்குதலுக்கிலக்கான ஈழ அகதியிடமிருந்த பெருந்தொகையான பணமும் ஐபாட் மற்றும் தொலைபேசி என்பனவற்றையும்  கறுப்பின நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். </p>
<p>   இந்த மாதம் முதலாம் திகதி குறித்த பிரதேசத்தில்  வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களின் வெறியாட்டத்தில் நான்குபேர் கத்திவெட்டுக்கு இலக்காகினர் என்பது குறிப்பிடத்தக்கது.  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=13993</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்துமயானத்தையும் சுவீகரிப்பதற்கு முயற்சி; எழுதுமட்டுவாழ் வடக்கு மக்கள் எதிர்ப்பு</title>
		<link>http://tamilnaatham.dk/?p=13987</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=13987#comments</comments>
		<pubDate>Sun, 16 Jun 2013 14:45:03 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=13987</guid>
		<description><![CDATA[எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=13987">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில்<span id="more-13987"></span> குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.</p>
<p> எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகில் 52 ஏக்கர் காணியில் நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த காணிக்கு அருகில் உள்ள இரண்டு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மயானக் காணிகளையும் சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. </p>
<p>இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். வேறு இடத்தில் ஆலயக் காணியொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் காலம் காலமாக பயன்படுத்தி வரும் மயானத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரியும் அந்த மக்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். </p>
<p>ஒட்டுவெளி, கரம்பகம், மருதங்குளம், கல்யாணக்குளம், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், எழுதுமட்டுவாழ் வடக்கு ஆகிய பிரிவுகளில் வாழும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.</p>
<p> இதேவேளை, எழுதுமட்டுவாழ் தெற்கில் கடந்த வருடம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மயானப் பகுதி இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் அந்த மக்களும் எழுதுமட்டுவாழ் வடக்கில் உள்ள இந்து மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=13987</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காணி சுவீகரிப்புக்கு எதிராக; வழக்குத் தாக்கல் செய்தோரின் விவரம் திரட்டுகிறது அமைச்சு</title>
		<link>http://tamilnaatham.dk/?p=13982</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=13982#comments</comments>
		<pubDate>Sat, 15 Jun 2013 13:19:28 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=13982</guid>
		<description><![CDATA[வலி.வடக்கு காணி சுவீகரிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவர்களின் விவரங்கள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால்... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=13982">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>வலி.வடக்கு காணி சுவீகரிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவர்களின் <span id="more-13982"></span>விவரங்கள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் மாவட்டச் செயலகம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p>
<p>  வலி. வடக்கில் இராணுவத்தினரால் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப் பரப்பு சுவீகரிப்புச் செய்யப்படுவதை எதிர்த்து வலி.வடக்கு மக்கள் 2 ஆயிரம் பேர் வரை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.</p>
<p>    இந்த நிலையில் மேற்படி வழக்குத் தாக்கல் செய்தவர்களினதும், அவர்களின் காணி உறுதி விவரங்களையும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. </p>
<p>  இதற்காக வழக்குத் தாக்கல் செய்தவர்களின் பெயர் விவரங்கள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=13982</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் காலமானார்!</title>
		<link>http://tamilnaatham.dk/?p=13978</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=13978#comments</comments>
		<pubDate>Sat, 15 Jun 2013 13:10:13 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[தமிழகச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=13978</guid>
		<description><![CDATA[பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகரும் தமிழ்தேசியத்தை முன்னெடுத்து சென்றவருமான திரு.மணிவண்னன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மணிவண்ணன் தமிழ் திரையுலகத்தில் நல்ல படிப்பாளி... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=13978">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகரும் தமிழ்தேசியத்தை முன்னெடுத்து சென்றவருமான <span id="more-13978"></span>திரு.மணிவண்னன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.</p>
<p><a href="http://tamilnaatham.dk/?attachment_id=13979" rel="attachment wp-att-13979"><img src="http://tamilnaatham.dk/wp-content/uploads/2013/06/manivannannorewe-5.jpg" alt="" title="manivannannorewe (5)" width="500" height="333" class="alignleft size-full wp-image-13979" /></a></p>
<p>மணிவண்ணன் தமிழ் திரையுலகத்தில் நல்ல படிப்பாளி நல்ல சிந்தனையாளர் பொதுவுடமை தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து சென்றவர் ஈழவிடுதலைக்கு முழுமையான ஆதரவினை வெளிப்படுத்தியவர்.</p>
<p>தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து தமிழ் உணர்வினை வெளிப்டுத்தியவர்.<br />
அவர் இறக்கும் போது வயது 59 ஆகும் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவன்னன். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p>
<p>இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம்ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார் நடிகர் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்</p>
<p>இயக்குனர் மணிவண்ணனின் இறுதி ஆசையினை அண்மைக்காலத்தில் வெளியான அமைதிப்படை -2வான நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ படம். படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன் &#8221;நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந் திருப்பேன்.</p>
<p>தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால் ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.  என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை என்று கருத்துவெளியிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=13978</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்து ஆலயங்களின் மீதான தாக்குதலை கண்டித்து பேரணி; இன்று யாழ். நகரில் நடைபெறும்</title>
		<link>http://tamilnaatham.dk/?p=13975</link>
		<comments>http://tamilnaatham.dk/?p=13975#comments</comments>
		<pubDate>Fri, 14 Jun 2013 09:53:37 +0000</pubDate>
		<dc:creator>இனியவன்</dc:creator>
				<category><![CDATA[தாயகம்/இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnaatham.dk/?p=13975</guid>
		<description><![CDATA[இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகரில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.... <a class="meta-more" href="http://tamilnaatham.dk/?p=13975">more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை<span id="more-13975"></span> யாழ். நகரில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மேற்கொண்டுள்ளது. </p>
<p>அண்மைக் காலமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள், ஆலயங்களில் பெறுமதிமிக்க பொருள்கள் சூறையாடப்படுதல் ஆகியவற்றைக் கண்டித்தே இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.</p>
<p> இன்று காலை 9 மணிக்கு நல்லூர் முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இந்தக் கண்டனப் பேரணி யாழ். மாவட்டச் செயலகத்தில் நிறைவடையும். இறுதியில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மனுவும் கையளிக்கப்படவுள்ளது. </p>
<p>இந்தப் பேரணியில் யாழ். மாவட்டத்திலுள்ள இந்து ஆலய நிர்வாகிகள் இந்து மன்றங்கள், இந்து குருமார்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ். பல்கலைக்கழகம் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இணைப்பாளர் கேட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnaatham.dk/?feed=rss2&#038;p=13975</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
