7:58 pm - Wednesday June 19, 2013

திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம்.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும்
செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ் மக்களும் திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம்.
06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார்.

இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது.

அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10:00 மணிக்கு முன்னர் மகிந்த உரையாற்றுவதற்காக அந்த வீதியால் ஊர்தியில் வரும்போதே எமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கவேண்டியிருப்பதால் அன்றைய நாள் காலை 9:00 மணிக்கு மான்சன் கவுசுக்கு முன்னால் எமது மக்கள் அனைவரும் அணியணிகாத் திரண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Filed in: தாயகம்/இலங்கை

No comments yet.

Leave a Reply